யாழில் போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

யாழ்.நெல்லியடி – இமையாணன் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வைத்து ஹெரோயின் போதைப் பொருளுடன் இரு இளைஞர்கள் நெல்லியடி பொலிஸ் நிலைய விசேட புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் மற்றும் நல்லூர் பிரதேசங்களை சேர்ந்த 24, 27 வயதான இரு இளைஞர்களே கைது... Read more »

பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் சில பொருட்களின் விலைகளில் திடீர் குறைவு ஏற்பட்டுள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ பருப்பு விலை 330 ரூபாயாக குறைந்துள்ளது. முன்னதாக ஒரு கிலோ பருப்பு மொத்த விற்பனை விலை ரூபாயாக இருந்தது. அதன்படி, ஒரு கிலோ பருப்பின்... Read more »

இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு

இன்றைய தினம் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதற்கமைய A முதல் L மற்றும் P முதல் W வரையான வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு மணித்தியாலங்கள் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் குறித்த பகுதிகளில் பகலில்... Read more »

தேர்தல் விடயத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது – காவிந்த ஜயவர்தன

தேர்தல் விடயத்தில் மக்களை ஏமாற்றுவதற்கான நடவடிக்கைகளிலேயே அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடவடிக்கைளுக்காக நாம் கிராமங்களுக்கு செல்லும்போது தேர்தல் நடைபெறுமா... Read more »

கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…..!

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.  1@ கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி... Read more »

இறுதி அறிக்கையின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தார். நெருக்கடிக்குப் பின்னரான பிரச்சினைகளைத் தீர்க்க, மக்களையும்,... Read more »

துருக்கியில் பாரிய நிலநடுக்கம்: சிரியாவில் 20 ஐ.எஸ் கைதிகள் தப்பியோட்டம்

துருக்கியில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து, சிரியாவிலுள்ள சிறைச்சாலையில் கைதிகள் கலகங்களில் ஈடுபட்டதுடன், 20 கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். சிரியாவின் வடமேற்குப் பிராந்தியத்தில், துருக்கி எல்லையிலுள்ள ரஜோ நகருக்கு அருகிலுள்ள சிறையிலிருந்தே இவர்கள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பியோடியவர்களில் பெரும்பாலானோர் ஐ.எஸ். இயக்கத்தின் அங்கத்தவர்கள் என சிறைச்சாலை... Read more »

துருக்கிக்கு உதவிகளை வழங்க தயார் நிலையில் இருக்கும் இலங்கை!

துருக்கி மற்றும் சிரியா எல்லையில் இடம்பெற்ற அதி பயங்கர நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு, பல நாடுகள் உதவிகளை அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள துருக்கிக்கு உதவுவதற்கு இலங்கையும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனைத்... Read more »

தானாக இயங்கி விபத்துக்குள்ளாகிய உழவு இயந்திரம் – சாரதி படுகாயம்

ஹட்டன் – டிக்கோயா பகுதியில் உழவு இயந்திரம் ஒன்றும் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் படுகாயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஹட்டன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட டிக்கோயா தேயிலை தொழிற்சாலைக்கு அருகாமையில் நேற்று (06) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,... Read more »

இலங்கையில் 55 அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு

இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்ட 55 திட்ட அரச அலுவலகங்களை மூட அரசாங்கம் முடிவு செய்துள்ளது. திட்ட அலுவலகங்கள் மற்றும் திட்ட முகாமைத்துவ அலகுகளை மீளாய்வு செய்வதற்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் அமைச்சரவை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்... Read more »