கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி…..!

கிளிநொச்சியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். கிளிநொச்சி பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது. 
1@

கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனத்துடன் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார். குறித்த விதியில் நெல் உலர விடுவதனால் குறித்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்ததாக சம்பவத்தை அவதானித்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவத்தில் 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews