அதிரடிப்படையினர் துரத்திச் சென்ற கன்டர் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்து!

யாழ். வல்லிபுரகுறிச்சி பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்த கன்டர் வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விசேட அதிரடிப்படையினர் குறித்த வாகனத்தை நிறுத்தியபோது வாகனத்தை நிறுத்தாது சாரதி தொடர்ச்சியாக பயணித்த நிலையில், விசேட அதிரடிப்படையினர் துரத்திச் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம்... Read more »

யாழ்.நீர்வேலியில் 3 வாள்களுடன் விசேட அதிரடிப்படையினால் ஒருவர் கைது!

யாழ்.நீர்வேலி பகுதியில் 3 வாள்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நீர்வேலி மேற்கை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளதுடன், 3 வாள்கள் மீட்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து... Read more »

வடமாகாண மக்களுக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு! |

வட மாகாணத்தின் 5 மாவட்டங்களிலும்,  எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்படவுள்ளதாக மாகாண சுகாதார பணிப்பாளர்  வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார். 30 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும், 18 வயதிற்கு மேற்பட்ட பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்குவகிக்கும் தொழிலாளர்கள் மற்றும் நோய்பரவும்... Read more »

திருமணத்திற்கு சென்ற நபரை பொலிஸார் என கூறி கடத்திய கும்பல்! நகை மற்றும் பணம் கொள்ளை….!

திருமண நிகழ்வுக்கு சென்ற நபரை கை விலங்கிட்டு அவருடைய வாகனத்திலேயே கடத்தி பணம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள கார் தரிப்பிடம் ஒன்றில் நடந்துள்ளதாக பொலிஸார் தொிவித்திருக்கின்றனர். சுமார் 5 இலட்சம் ரூபா வரை பெறுமதி மிக்க ஆபரணங்களும்... Read more »

திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 15 பேருக்கு கொவிட் தொற்று! 30 பேர் தனிமைப்படுத்தலில்.. |

திருமண நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்த நிக்கவரெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  திருமண வைபவத்திற்காக 20 பேர் கொண்ட குழுவொன்று நிக்கவெரட்டியவில் இருந்து மாத்தறைக்குச் சென்றுள்ளது. அவர்களில் 15 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிகிச்சை... Read more »

பாகிஸ்தானுக்கு அனுப்பபட்ட 35 ஆயிரம் கண்கள் யாருடையது? எப்படி அனுப்பினீர்கள்? தெளிவுபடுத்து அரசிடம் பகிரங்க கோரிக்கை.. |

பாகிஸ்த்தானுக்கு 35 ஆயிரம் கண்கள் எவ்வாறு அனுப்பபட்டது என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு நேற்று (10) கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனையில் அமைந்துள்ள மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய காரியாலயத்திற்கு முன்பாக... Read more »

மாநகரசபை வரவுசெலவு திட்டத்தை தோற்கடிக்கும் வகையில் கட்சி தலைவர்களும், உறுப்பினர்களும் செயற்படமாட்டார்கள்! மாநகர முதல்வர் கருத்து.. |

யாழ்.மாநகரசபையின் 2022ம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் ஏகமனதாக நிறைவேறும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. என யாழ்.மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில். வரவு செலவுத் திட்ட தயாரிப்பின்போது அனைத்து உறுப்பினர்களுடனும் கலந்து பேசி அவர்களுடைய கோரிக்கைகளையும் உள்ளடக்கியே... Read more »

கொடிகாமம் – கச்சாயில் பாலியல் தொந்தரவு! சந்தேகநரை தேடும் பொலிஸார்.. |

யாழ்.கொடிகாமம் – கச்சாய் பகுதியில் வசித்துவரும் குடும்ப பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவிக்கப்படும் நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். குறித்த குடும்ப பெண்ணின் கணவரும், பிள்ளைகளும் வெளியில் சென்றிருந்தவேளை அயல் வீட்டிலிருந்த குடும்ப தலைவர் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்று முரண்பட்டுள்ளார். பின்னர்... Read more »

அமெரிக்காவை பின்பற்றும் அவுஸ்திரேலியா! சீனாவுக்கு அதிகரிக்கும் அழுத்தம்.

ஒலிம்பிக் போட்டிகள், பாராஒலிம்பிக் போட்டிகள், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவை ஒருநாட்டில் நடைபெறும்போது, மற்ற நாடுகளின் அமைச்சர்கள், அதிகாரிகள் அந்தப் போட்டிகளைக் காண சிறப்பு தூதர்களாக பங்கேற்பார்கள். இந்நிலையில், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டு சீனாவில் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில், சின்ஜியாங்கில் நடந்துகொண்டிருக்கும்... Read more »

தேசத்தை காப்பாற்றியவருக்கு தண்ணீர் கொடுக்க முடியவில்லை! பிபின் ராவத்தை இறுதியாக பார்த்த நபர் வெளியிட்ட தகவல்.

இந்திய முப்படைகளின் தளபதி பயணித்த ஹெலிகொப்டர் தமிழகத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளாகியிருந்தது. இந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகின்றது. இதன்போது இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளான போது அதிலிருந்த முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத்தை கடைசியாக உயிருடன் பார்த்ததாகவும், அவர் பேசியதை கேட்டதாகவும்... Read more »