யாழ்.தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை ஒன்றால் அதிகரிப்பு..!

யாழ்.தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை மேலும் ஒன்றால் அதிகரித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு யாழ்.தேர்தல் மாவட்டத்துடன் இணைகிறது. கடந்த வருடம் புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் அடிப்படையில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  ஒன்றால் குறைந்து... Read more »

வத்திராயனில் மரணமடைந்த மீனவர் குடும்பங்களுக்கு முல்லைத்தீவு மீனவர்கள் உதவி……!

கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இரண்டு குடும்பத்திற்கும் முல்லைத்தீவு கள்ளப்பாடு மீனவர்கள் இன்று உதவி வழங்கியுள்ளனர். கடந்த மாதம் இறுதி பகுதியில் கடற்றொழிலிற்க்கு சென்று காணாமல் போன நிலையில் கடந்த 31/01/2022 அன்று சடலமாக மீட்கப்பட்ட பிறேம்குமார், தணிகைமாறன்  ஆகியோரது... Read more »

மலேசிய வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசிய குடியேறிகள் கைது –

மலேசியாவின் Johor மாநிலத்தில் இருக்கும் Tenggaroh பகுதியில் உள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த இந்தோனேசியாவைச் சேர்ந்த 12 ஆவணங்களற்ற குடியேறிகள் மலேசிய படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதில் கைது செய்யப்பட்ட அனைவரும் ஆண்கள் எனவும் அவர்கள் 19 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்களை... Read more »

திருக்கோவில் தங்கவேலாயுதபுரத்தில் பப்பாசி,மரவள்ளி உற்பத்திகளை விரிவாக்க உற்பத்தியாளர்களுக்கு ஆலோசனை…..!

அரசாங்கத்தின் சேதனைப் பசளைகளைப் பயன்படுத்தி உள்ளுர் உற்பத்தியாளர்களை மேம்படுத்தும் நோக்கத்திற்கு அமைவாக திருக்கோவில் தங்கவேலாயுதபுரம் விவசாய விரிவாக்கல் பிரிவில் பப்பாசி மற்றும் மரவள்ளி உற்பத்திகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தின் தங்கவேலாயுதபுரம் விவசாய நிலையத்திற்குட்பட்ட பகுதியில் பழப்பயிர் மற்றும் மரவள்ளிச்... Read more »

மட்டு.செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் மகாகும்பாபிஷேக விழா –

மட்டக்களப்பு செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய புனராவர்தன, அஷ்ட பந்தன, நவகுண்ட பட்ஷ, மஹா கும்பாபிஷேக திருக்குடமுழுக்கு பெருஞ்சாந்திவிழா நேற்று நிறைவுற்றது. குறித்த ஆலய வரலாற்றில் முதற் தடவையாக சுவாமி யானையில் ஏறி பவணி வந்ததுடன் கும்பாபிஷேகப் பெருவிழாவில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த... Read more »

வடக்கு மீனவர்களின் பிரச்சினை தீர்வுக்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை….! அன்னராசா.

இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு புத்திஜீவிகள், சிவில் சமூகங்களின் ஒத்துழைப்பு தேவை என யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் சம்மேளனத் தலைவர் அன்ன ராசா தெரிவித்தார் வடக்கில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட நான்கு... Read more »

விழிநீர் பெருக்கெடுக்க இறுதி விடைபெற்றார் ஓஷதி!

இலங்கை பூப்பந்து வீராங்கனை ஓஷதி குறுப்பின், இறுதிக்கிரியைகள் நேற்று பிற்பகல் நடைபெற்றன. இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் ,சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். கொழும்பு விசாகா கல்லூரியின் பழைய மாணவியான ஓஷதி பல சர்வதேச பூப்பந்துப் போட்டிகளில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்குக! – சுமந்திரன் வலியுறுத்து –

“இலங்கையில் 300 – 400 பேர் தற்போதும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் குறித்து எவரும் பேசுவதில்லை. ஒருசிலரது வழக்குகளே எப்போதும் பிரபல்யமாகப் பேசப்பட்டுள்ளன. எனவே, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்க அல்லது முழுமையாக மாற்ற நடவடிக்கை எடுக்க... Read more »

புதையல் தோண்டுவதாக கூறி 7 பெண்களின் வாழ்க்கையில் விளையாடிய பூசகர் 21 வயது பெண்ணுடன் கைது! |

புதையல் தோண்டுவதாக கூறி பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் மாத்தளை – நாவுல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 46 வயது பூசகருடன் தம்புள்ளை பிரதேசத்தச் சேர்ந்த 21 வயதுடைய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேக... Read more »

ஜனாதிபதி வருகிறாராம்..! தமிழ் மொழி கல்வெட்டு பின்புறம் சென்றது, சிங்கள மொழி கல்வெட்டு முன்புறம் வந்தது, வவுனியா பல்கலைகழகத்தில்.. |

வவுனியா பல்கலைகழகத்திற்கு இன்று விஜயம் செய்யும் ஜனாதிபத கோட்டபாய ராஜபக்ஸ பல்கலைகழகத்தை அங்குரார்ப்பணம் செய்துவைக்கவுள்ள நிலையில் பல்கலைகழக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்ட நினைவுக் கல்லில் இருந்த தமிழ் மொழி கல்வெட்டு திடீரென இடமாற்றப்பட்டுள்ளது.  பல்கலைக்கழகத்திற்கு நுழைவாயில் ஊடாக உட்சென்று பல்வேறு பீடங்களுக்கும் பிரிந்து செல்லும்... Read more »