மீண்டும் பதவியை இராஜினாமா செய்தார் சியம்பலாபிட்டிய….!

நேற்றைய தினம்  பிரதி சபாநாயகராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய பதவி விலக தீர்மானித்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கையளித்துள்ளார். ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி பிரதி சபாநாயகர் பதவியில் இருந்து... Read more »

விசுவமடு பகுதியிலும் மக்கள் போராட்டம்….!

மக்கள் விடுதலை முன்னணியினரின்  ஏற்ப்பாட்டில் இன்றைய தினம் விசுவமடு பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி, முல்லைத்தீவு, எல்லை பகுதியான விசவமடு சந்தியில் குறித்த போராட்டம் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்றது. மக்கள் விடுதலை முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட  இணைப்பாளர் மோகன் தலைமையில்... Read more »

கர்நாடகா தகவல் தொழில்நுட்ப அமைச்சரை சந்தித்த  வடக்கு ஆளுநர் ஜீவன்….!

இந்தியா சென்றுள்ள வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கர்நாடக மாநில  தொழில்நுட்பம், உயர்கல்வி, அறிவியல் மற்றும் கர்நாடகாவின் தொழில்நுட்பம் டாக்டர் சிஎன் அஷ்வத் நாராயணை நேற்றைய தினம் வியாழக்கிழமை சந்தித்தார்.  வடமாகாணத்தை மையமாக கொண்டு இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை இலங்கைக்கு கொண்டு வருவது... Read more »

தீவகத்தில் கால்பதிக்க தயாராகும் இந்தியா.. மீள் புதுப்பிக்கத்தகு சக்கித் திட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் இந்திய அதிகாரிகள் களம் விஜயம்….!

தீவகத்தில்  ஆரம்பிக்கபடவுள்ள மீள்புதுப்பிக்கதகு சக்தி திட்டத்தை யாழ் இந்திய  துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ் உட்பட்ட தூதரக அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை நேரடியாக சென்று பார்வையிட்டனர் யாழ் தீவகப் பகுதிகளான நெடுந்தீவு,அனலைதீவு,நயினாதீவு பகுதிகளில் ஏற்கனவே சீனாவுக்கு வழங்கப்பட இருந்த  மீள்புதுப்பிக்கதகு சக்தித் திட்டத்தினை இந்தியாவுக்கு வழங்கப்படவுள்ளதாக... Read more »

நாடு முழுதும் கடைப்பிடிக்கப்பட்ட கதவடைப்பு வடமராட்சியின் நிலவரம்…..!

நாடு முழுதும் ஒருங்கிணைந்த தொழிற்சங்கங்களால்  அழைப்பு விடுக்கப்பட்டு இன்றையதினம் இடம்பெறுகின்ற கதவடைப்பு போராட்டம் வடமராட்சியில்  பருத்தித்துறை, மந்திகை, நெல்லியடி,  போன்ற நகர் பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது ஆக்காங்கே ஒருசில வரத்தக நிலையங்கள் மட்டும் திறந்துள்ளன. ஆனால் மதுபான சாலைகள்... Read more »

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும் கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலைமை….!

நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் அறிவிக்கப்பட்டபோதும்  கிளிநொச்சியில் ஓரளவு சாதாரண நிலையை அவதானிக்க முடிவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்கள். கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகள், கிளிநொச்சி சேவைச் சந்தை மற்றும் தபால் நிலையங்கள் பூட்டப்பட்டுள்ளன. இதே வேளை நகர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள்... Read more »

மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்ப நீண்ட வரிசை……!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்றும் எரிபொருள் நிரப்புவதறக்காக மக்கள்  நீண்ட வரிசையில் கொழுத்தும் வெயிலிலும் காத்திருக்கின்றனர். வடமராட்சியின் நெல்லியடி, குஞ்சர்கடை, கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம் ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லாத நிலையில் பெற்றோல் மட்டும் நிரப்பும் மந்திகை... Read more »

கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் அனுமதி…..!

கட்டுதுவக்கு வெடித்து ஒருவர் படுகாயம், ஆபத்தான நிலையில் கிளிநொச்சி  மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு  j/434 கிராம சேவகர் பிரிவில் பாலைப்பழம் பிடுங்க சென்ற ஒருவருக்கே  மிருகங்களை வேட்டையாடுவதற்காக  பொருத்தப்பட்டிருந்த பொறி வெடியான கட்டுத்துவக்கு வெடித்தே  தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டுருந்த நிலையில் ... Read more »

யாழ்.பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில் தொடர் வழிப்பறி..! அச்சுவேலியில் பதுங்கியிருந்த இருவர் சிக்கினர், நகைகள் மீட்பு,.. |

யாழ்.இளவாலை பகுதியில் தொடர்ச்சியான வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தேடப்பட்டுவந்த இருவர் அச்சுவேலியில் வீடொன்றில் ஒளிந்திருந்த நிலையில் வைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளை சேர்ந்த 22 வயதான இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொியவிளான், வடலியடைப்பு பகுதிகளில்... Read more »

நாட்டில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு..! பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு….!

நாட்டில் எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, நேற்று பிற்பகல் முதல் அமுலுக்கு வரும் வகையில், மோட்டார் சைக்கிள்களுக்கு 2000 ரூபாவுக்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 3,000 ரூபாவுக்கும் மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது. அத்துடன், கார்கள், வேன்கள் மற்றும் ஜீப் ரக வாகனங்களுக்கு,... Read more »