தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பயன்படுத்திய ஜீப் மஹரகமவில்..!

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் ஜீப் வாகனம் ஒன்றை மஹரகம பகுதியை சேர்ந்த ஒருவர் தற்போது பயன்படுத்திவருகின்றார்.

கபில புலத்கே (வயது 50) என்பவதே தற்போது பயன்படுத்தி வருகின்றார் என்று கூறப்படுகின்றது. இந்த வகை ஜீப்பை முதன் முதலில் பயன்படுத்தியது அமெரிக்க ராணுவம் எனவும்,

1942 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஜீப், இரண்டாம் உலக போரின்போது உயர் அதிகாரிகளால் பயன்படுத்தப்பட்டது. இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த ஜீப்,

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் வைத்து அதன் உரிமையாளரிடமிருந்து 1988ஆம் ஆண்டு புலிகளால் வாங்கிக்கொள்ளப்பட்டது .

2009 ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் அந்த ஜீப் வண்டி, கராஜில் இருந்துள்ளது.

அந்த வாகனத்தின் மூன்றாவது உரிமையாளரே, சகல ஆவணங்களை காண்பித்து, ஜீப் வண்டியை பெற்று, அதனை மஹரகமவில் உள்ள கராஜில் வைத்து திருத்தியுள்ளார்.

இந்த வாகனத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அவருடைய நெருங்கிய பாதுகாவலர்கள், மூத்த தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.

 

Recommended For You

About the Author: Editor Elukainews