நாட்டில் இன்றும் மின்வெட்டு அமுலாகும்..!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். என இலங்கை மின்சாரசபை தொிவித்திருக்கின்றது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே குறித்த சிக்கல் நிலை தொடரும் என்றும் மின்சார சபை தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையம் முழுமையாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இனி மின்வெட்டு ஏற்படாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

எனினும் கோளாறு சரி செய்யப்படாத காரணத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9:30 மணி வரையான நேரப்பகுதிக்குள் நாட்டின் பல பகுதிகளில்

30 நிமிடங்கள் மின்வெட்டு ஏற்படலாம்” என்று மின்சார சபை தெரிவித்துள்ளது

Recommended For You

About the Author: Editor Elukainews