பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இடம்பெற்றுவரும் நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்களுக்கு ஏற்படும் சிறிய நோய் அறிகுறிகளைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை என மருத்துவர் மல்காந்தி கல்ஹேனா தெரிவித்தார்.

தடுப்பூசி உடலில் செயல்படுத்தப்படுவதால் அந்த சிறிய அறிகுறிகள் ஏற்படுகின்றன என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

பைசர் மூன்றாவது டோஸை செலுத்தும் போது, ​​கொவிட் போன்ற சிறிய அறிகுறிகள் மூன்று நாட்கள் வரை தோன்றும்.

உடல்வலி, தலைவலி, குமட்டல் அல்லது வாந்தி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.ஆனால் பயப்பட வேண்டாம். தடுப்பூசியால் ஏற்படக்கூடிய சில அறிகுறிகள் இவை.

Recommended For You

About the Author: Editor Elukainews