சாணக்கியனுக்கு வரலாறு தெரியாது: சபீஸ்.

வடக்கில் மக்களுக்கு நடந்த துன்பங்கள் கிழக்கிலே மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் எவையும் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்குத் தெரியாது என அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவருமான எஸ்.எம்.சபீஸ் தெரிவித்தார். வடக்கு கிழக்கு மக்களுக்கு நடந்த துன்பங்கள் சாணக்கியனுக்கு தெரியாது. வெளிநாட்டு சக்திகளின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காகவே முயற்சிக்கிறார், வடகிழக்கு இணைப்பு என்பது ஒரு காலத்திலும் சாத்தியமற்றது.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பகுதியில் உள்ள அவரது அலுவலகத்தில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews