தமிழ் தேசிய கூட்டமைப்புடன் எந்தவித பேச்சிலும் ஈடுபடவில்லை…..!சம்பிக்க ரணவக்க.

தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மக்கள் சக்தியுடன் எந்தவித பேச்சு  வார்த்தையிலும் ஈடுபடவில்லை எனவும், பிரதேசவாதம் சாராதுஅனைத்து மக்களின் நலன்சார்ந்தே அனைவரும் செயற்படுகின்றோம் எனவும், சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று அவரிடம் ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட  கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த பிரதேசம் யுத்த காலத்திலும், அதற்கு பின்னரான காலத்திலும் மிகவும் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவித்த பிரதேசமாக இருக்கின்றது. 10 ஆண்டுகளிற்கு பின்னரும் இவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டும் எனும் நிலைப்பாடு இருக்கின்றது. உள்ளக வீதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளிற்கு முகம் கொடுத்துவரும் இவர்கள் விசேடமாக விவசாயிகளின்  உரம் தொடர்பான பிரச்சினை தொடர்கிறது என்றும் கொவிட் நிலை காரணமாக மிகவும் இவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்றும், இவ்வாறான பிரதேசங்களை அடையாளம் கண்டு அவர்களிற்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டி உள்ளது  என்றும், இனம், மதம், சமயம் போன்ற விரச்சினைகளிற்கு அப்பால், அனைத்து இல்ஙகை மக்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் காஸ், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளிற்கு நாட்டு மக்கள் முகம் கொடுக்கின்றனர்.

இந்த நேரத்தில் அனை்தது மக்களும் ஒன்றாக வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்.

பாராளுமன்றத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களும் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடன் இதுவரை தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித பேச்சுக்களும் இடம்பெறவில்லை. ஆயினும், பாராளுமன்றில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலலும், ஒட்டுமொத்தமாக மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்றில் ஒன்றாக செயற்படுகின்றோம்.

பிரதேசவாதங்களை களைந்து அனைத்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் ஒன்றாக செயற்படுகின்றோம் என அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews