இலங்கையில் 9 வருடங்களின் பின்னர் மீண்டும் மலேரியா!

இலங்கையில் காலி, நெலுவ பிரதேசத்தில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உகண்டாவில் பணியாற்றிய அவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கை திரும்பியதாக தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சந்திம சிரிதுங்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த 27 ஆம் திகதி அவசர சுகயீனம் காரணமாக அவர், உடுகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மலேரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரியவந்தது.
நாட்டில் 2012 ஆம் ஆண்டில் இறுதியாக மலேரியா நோயாளியொருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.
அதன்பின்னர், மூன்று வருட காலப்பகுதியில் மலேரியா நோயினால் பாதிக்கப்பட்ட எவரும் அடையாளம் காணப்படாததால், இலங்கை மலேரியா நோயற்ற நாடாக 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews