சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

நாட்டில் இதுவரை 4 இலட்சத்து 65 ஆயிரத்து 48 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் இதுவரை ஒரு கோடியே 59 இலட்சத்து 21 ஆயிரத்து 621 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸும், ஒரு கோடியே 37 இலட்சத்து 29 ஆயிரத்து 376 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸும் போடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews