![](https://www.elukainews.com/wp-content/uploads/2021/11/IMG-2d0ccb803dc5bdc600b4d9357517076b-V-768x576-1-768x490.jpg)
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்துவரும் நிலையில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள வர்த்தக நிலையம் மீது மின்னல் தாக்கியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் மீதே மின்னல் தாக்கியுள்ளது.
இதனால் கடைத்தொகுதியில் பொருத்தியிருந்த மின்மானி மற்றும் மின்னிணைப்புக்கள் சேதமாகியுள்ளன.
குறித்த நேரம் வர்த்தக நிலையத்தில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.