மண்டான் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதி கோர விபத்து! பெண் படுகாயம்.. |

யாழ்.பருத்தித்துறை – மண்டான் வீதியில் இ.போ.ச பேருந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் பெண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.

நேற்று வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வாதரவத்தை பகுதியைச் சேர்ந்த எஸ்.சிவகலா (வயது -30) என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

நோயாளர் காவுவண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். விபத்து தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews