ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் ஆபத்தின் மத்தியில் பயணம்..!

யாழ்.தீவகத்தின் காரைநகர் – ஊர்காவற்றுறை பகுதிகளை இணைக்கும் பாதையில் மக்கள் அச்சத்தின் மத்தியில் பயணித்தை முன்னெடுத்து வருகின்றனர். 

சுமார் 600 மீற்றர் நீளம் கொண்ட இந்த படகுப் பாதை பயணம் அச்சுறுத்தல் மிக்கதாகவே உள்ளதாக அதில் பயணம் செய்வோர் கூறுகின்றனர்.

தண்ணீரில் நடந்தே படகுப் பாதையில் ஏறவேண்டியுள்ளது. இதில் அரச உத்தியோகத்தர்கள், பொதுமக்கள்,

நீதிமன்றுக்கு வரும் மக்கள் என பலரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு நிதி ஒதுக்குவதாக 2015 ஆம் ஆண்டு கடந்த அரசும், 2021 ஆண்டிலும்

தற்போதைய அரசும் இதற்கு நிதி ஒதுக்கியதாக கூறப்பட்டது ஆனால் இந்த கேபிள் மூலமாக இயக்கப்படும் இந்த படகுப் பாதையை மாற்ற

எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பயணிப்போர் கருத்து தெரிவித்துள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு (2020) இல்

ஊர்காவற்றுறை – காரைநகர் இடையில் 500 மீற்றர் நீளமான பாலம் அமைப்பதற்கு சுமார் 1700 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக. செய்தி வெளியானமையும் குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews