அயல்வீட்டு காரருடன் பிரச்சனை, சுவிஸ் நாட்டில் இருந்து கூலிபடைக்கு பணம் அணுப்பி தாக்குதல்! மூவர் கைது!

அயல்வீட்டு காரருடன் பிரச்சனையில் சுவிஸ் நாட்டில் இருந்து கூலிபடைக்கு பணம் அணுப்பி தாக்குதல் நபர்களை யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் உடுவில் அம்பலவாணர் வீதி பகுதியில் கடந்த 19திகதி இடம்பெற்ற பெற்றோல் குண்டு அடித்து மற்றும் வீட்டினை சேதப்படுத்தியவர்கள் இருவரையும் பயன்படுத்திய வெகோ மோட்டார் சைக்கிளையும் வாள் ஒன்றினையும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மாணிப்பாய் பகுதியில் வைத்து கைது செய்தனர்
கடந்த 19 திகதி இடம்பெற்ற தாக்குதலில் 4இலச்சம் பெறுமதியாண சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுத்தப்பட்டு இருந்தன

காணிப்பிரச்சனை ஒன்றில் அயல்வீட்டுகாரருடன் ஏற்பட்ட மோதல் சம்பவமே இந்த தாக்குதல் இடம்பெற்றமைக்கு காரணம் என ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்தது மாணிப்பாயை சேர்ந்த ஒருவர் சுவிஸ்லாந்தில் வசிக்கும் நபர் ஒருவர் கூலிப்படைக்கு 3இலட்சம் ரூபாய் பணம் கொடுத்து வீட்டிற்கு பெற்றோல் குண்டு அடித்து வீட்டையும் அடித்து நொருக்க சொல்லியுள்ளார் அதன் காரணமாக மானிப்பாயை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பணம் வந்து அவர் தன்னுடன் உள்ள இளைஞர்களை கூட்டி சென்று சம்பவத்தை செய்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவர் உள்ளனர் அவர்களையும் கைது செய்வதற்கான நடவடிக்கையினை யாழ்மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் சுன்னாக பொலிஸாரும் மேற்கொண்டு வருகிறார்கள் கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரனையின் பின்னர் சுண்ணாக பொலிஸார் மல்லாக நீதிமன்றில் ஒப்படைக்கப்படுவார்கள்

Recommended For You

About the Author: Editor Elukainews