கொரோனாவிலிருந்து மீண்டார் மனோ எம்.பி.!

கொரோனா வைரஸ் தொற்றால் சுகவீனமுற்று கடந்த சுமார் பத்து நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட எம்.பியுமான மனோ கணேசன் பூரண சுகம் பெற்ற நிலையில் நேற்று வீடு திரும்பினார்.

ஊடகங்களுக்கு இது பற்றி கருத்துக் கூறிய மனோ எம்.பி.,

“சுகவீனமுற்ற வேளையில் எனக்கு ஆறுதல்களையும், ஆலோசனைகளையும் தெரிவித்து, மத வழிபாடுகளிலும் ஈடுபட்டு, அன்பையும், நம்பிக்கையையும் நேரடியாகவும், ஊடகங்கள், தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் தெரிவித்த கட்சி, கூட்டணி, நண்பர்கள், ஆதரவாளர்கள், அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வாழும் அன்புள்ளங்கள் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” – என்று கூறினார்.

Recommended For You

About the Author: Editor Elukainews