‘பட்ஜட்’டை எதிர்க்க மு.கா. தீர்மானம்!

அரசின் 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயா்பீடக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரசின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்ப்பது என்ற கட்சியின் உயர்பீடக் கூட்டத்தின் தீர்மானத்தை கட்சி எம்.பிக்கள் மீறினால் அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கைகளை எடுக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. தீர்மானித்துள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கூட்டத்தில் பேசிய உயர்பீட உறுப்பினர்கள் அனைவரும் அரசின் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதேபோல் அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவளித்த எம்.பிக்கள் மீது அப்போதே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், இந்த நிலை தற்போது ஏற்பட்டிருக்காது எனவும் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையடுத்து , இம்முறை பட்ஜட்டை ஆதரவளிக்கும் எம்.பிக்களிடம் விளக்கத்தைக் கோரி அதன் பின்னர் அந்த விளக்கம் திருப்தியில்லாத பட்சத்தில் அவர்களின் கட்சி உறுப்புரிமையை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews