மத்திய வங்கியின் ஆளுநர் இன்று யாழ்ப்பாணத்தில் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம்!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இன்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு
கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வயாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சில இடங்களை பார்வையிட்டதுடன் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார்.

இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள  தனியார் விடுதியில் இடம்பெறவுள்ள இலங்கை மத்திய வங்கியின் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வந்தமை குறிப்பட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews