யாழ்.பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் குடும்ப பெண் கைது! |

போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொிவித்தனர். 

கைது செய்யப்பட்டவர் 38 வயதுடையவர் எனவும், நீண்டகாலமாக போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி மேனன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் கடந்த வியாழக்கிழமை இந்த கைதினை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 2.40 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக  பொலிஸார் கூறியுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews