லண்டனில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞன் கொரோனா தொற்றினால் உயிரிழப்பு..!

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் அதிதீவிர நோய் பரவல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

யாழ்.கொழும்புத்துறை பகுதியில் தற்போது வசித்துவந்த நடராசா நிதிஸ்குமார் (வயது29) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். 

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews