தூணுடன் மோதிய மோட்டார் சைக்கிள்: இளைஞன் பலி!

குருணாகல் கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இப்பாகமுவ மடகல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.
இப்பாகமுவ பிரதேசத்திலிருந்து மடகல்ல பிரதேசத்திற்கு பயணித்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தூணுடன் மோதுண்டே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் பொல்பிதிகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 20வயதுடைய மகுல்பத்த பிரதேசத்தை சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews