மூன்று தசாப்தங்களுக்கு பின்னர் ‘எயார் பிரான்ஸ்’ விமான சேவை!

இலங்கைக்கு ‘எயார் பிரான்ஸ்’ விமான சேவை சுமாா் 30 வருடங்களுக்குப் பின்னர் இன்று ஆரம்பமாகியது. முதல் சேவையை மேற்கொள்ளும் விமானம் இன்று பிற்பகல் 1.25 மணிக்கு இலங்கையை வந்தடைந்தது.

அதேநேரம் கட்டுநாயக்கவில் இருந்தும் பாாிஸூக்கான முதல் விமானம் இன்று புறப்பட்டது. வாரத்துக்கு மூன்று தடவைகள் இந்தச் சேவை கொழும்புக்கும் பாரிஸூக்கும் இடையில் நடத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில் பாரிஸில் இருந்தும், திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தும் சேவைகள் இடம்பெறும்.

Recommended For You

About the Author: Editor Elukainews