பளையில் நேற்று விபத்து. ஒருவர் காயம்.

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பளை நகரப்பகுதியில் உள் வீதியில் இருந்து ஏ9 வீதிக்கு வந்த முதியவர் மீது கூலர் வாகனம் ஒன்று மோதியுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று (04) மதியம் இடம்பெற்றிருந்தது.
பளை பிரதேசத்திற்குட்பட்ட தம்பகாமத்தில் இருந்து ஏ9 வீதிக்கு துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் கிளிநொச்சிநோக்கி வந்த கூலர் வாகனத்தை அவதானிக்காமையே விபத்து இடம்பெற காரணமாக இருந்துள்ளது. குறித்த நபர் பளை பொது வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதன வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

3 Attachments

Recommended For You

About the Author: Editor Elukainews