பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு கறுப்பு தீபாவளி!

தோட்ட நிர்வாகங்களின் அடாவடி அதிகரித்துள்ளதுடன், பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதாகவும், அதன் மூலம், மலையக மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ராஜாராம் தெரிவித்துள்ளார்.
நுவரெலியா தலவாக்கலையில், இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, இம்முறையும் கறுப்பு தீபாவளிதான் எனவும், கவலை வெளியிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews