சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஐவர் கைது.

ஹட்டன், பொகவந்தலாவை கொட்டியாகல வத்த பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் ஐவரை பொகவந்தலாவை பொலிஸார் நேற்று (17) கைதுசெய்துள்ளனர்.

பொகவந்தலாவை பிரதேசத்தை சேர்ந்த 20, 24, 53, 60 மற்றும் 66 வயதுடைய ஐவரே இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று (18) நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews