விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீதிகோரி யாழில் போராட்டம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் ஏற்பாட்டில் விவசாயிகள் எதிர்நோக்கும் உர பிரச்சனை, மேலும் பல பிரச்சினைகளுக்கு நீதி கோரி, வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் கமநல சேவைத் திணைக்களங்களிற்கு முன்னால் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் யாழ்ப்பாணத்திலும் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்திலுள்ள கமநல சேவைத் திணைக்களங்களுக்கு முன்னால் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கவனயீர்ப்பு எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது

நல்லூர் பிரதேச கமநல சேவைத் திணைக்கள முன்றலில் வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சிவிகே சிவஞானத்தில் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் விவசாய பெருமக்கள் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews