இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து பாரிய கண்டண போராட்டம்.(வீடியோ இணைப்பு.)

இந்தியமீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்து முன்னெடுக்கும் பாரிய கண்டண போராட்டமானது  இன்று (17) காலை 7 மணிக்கு முல்லைத்தீவில் ஆரம்பமாகிய படகுகளில் பருத்தித்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.

 

இழுவைப்படகு தடைச்சட்டத்தினை அமுல்படுத்த கோரியே இன்று முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கடல் வளத்தினையும், நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுபை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது.
எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்து வருகின்றது.


இதனை முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரும் முகமாகவே குறித்த கடல்வழி படகு பேரணி இடம்பெற்றது. இதேவேளை, குறித்த படகு பேரணிக்கு பல்வேறு அமைப்புக்கள்இ  அரசியல் கட்சிகள் ஆதரவு வழங்கியிருந்தன.
இந்நிலையில் குறித்த மீனவர் பேரணியில் மீனவர்களுடன் அரசியல் பிரமுகர்களும் இணைந்திருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews