கொழும்பில் களமிறங்கியுள்ள பொலிஸார்

இலங்கை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வழிகாட்டலில் டிசம்பர் மாதம் தொடக்கம் பொலிஸ் திணைக்களத்தினால் யுக்திய செயற்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

குறித்த யுக்திய செயற்றிட்டமானது இன்று(14.03.2024) மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தின் முன்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூரப்பிரதேசங்களில் இருந்து கொழும்பிற்கு வருகை தரும் பேருந்துகள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது சிலர் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews