குடாரப்பில் வெடிபொருளை. வெடிக்க வைக்கும் நடவடிக்கையில் விசேட அதிரடி படை….!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடாரப்பு தரவை பகுதியில் வெடிக்காத. நிலையில் வெடிபொருள் காணப்பட்ட இலையில் நீதி மன்ற உத்தரவை பெற்று வெடிக்க வைக்கும் நடவடிக்கைகளை விசேட அதிரடி படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் பருத்தித்துறை போலீசாருக்கு பிரதேச வாசிகளால் தகவல் வழங்கப்பட்டிருந்த. நிலையில் இன்றைய தினம் அவ் வெடிபொருளை வெடிக்க வைக்கும் நடவடிக்கைகளை சிறப்பு அதிரடி படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடரபான விசாரணைகளை பருத்தித்துறை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அப் பகுதி விடுதலை புலிகள் மற்றும் இராணுவ முன்னரங்க பகுதி என்பது குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews