பொலிஸ் அராஜகத்தின் உச்சமே கஜேந்திரனின் கைது நடவடிக்கை!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை முன்னெடுத்த வேளை கைது செய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டு, பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்து தெரிவித்துள்ளார்.
இன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், கருத்து வெளியிட்டார்.
இதன் போது, பொலிஸாருக்கு எதிராக, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews