கல்மடுநகர் பகுதியில்  இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்….!   

கிளிநொச்சி மாவட்டம்  இராமநாதபுரம் போலீஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்று மாலை 4.30  மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவன் மரணமடைந்துள்ளான்.

தருமபுரம் பகுதியில் இருந்து இராமநாதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும்,  இராமநாதபுரம் பகுதியில் இருந்து தருமபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியத்திலேயே  மூவர் படுகாயம் அடைந்த நிலையில் தருமபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபொழுது அதில் ஒருவர் இராமநாதபுரம் கல்மடு நகர் பகுதியைச் சேர்ந்த கனகரத்தினம் கோசிகன் 33 வயது உடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

காயமடைந்ததில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது மற்றும் ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் இச்சம்பவம் தொடர்பாக இராமநாதபுரம் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Recommended For You

About the Author: Editor Elukainews