மேலும் 66 பேர் கொரோனாத் தொற்றால் மரணம்!

இதன்படி நாட்டில் பதிவான கொரோனா சாவுகளின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்து 284 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 36 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் என இருவர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 06 ஆண்கள், 05 பெண்கள் என 11 பேர் 30 – 59 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். 53 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். இதில் 23 ஆண்களும், 30 பெண்களும் அடங்குகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews