யாழ் சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டு நிறைவை முன்னிட்டு விசேட நிகழ்வு!

யாழ்ப்பாண சிறைச்சாலை புதிய கட்டடத்தில் நிறுவப்பட்டு 8 ஆண்டுகள் நிறைவடைவதைக் குறிக்கும் நிகழ்வு யாழ்ப்பாண சிறைச்சாலையில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

புதிய சிறைச்சாலை அத்தியட்சகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் 8 வது வருடத்தை குறிக்கும் முகமாக தயாரிக்கப்பட்ட கேக் வெட்டப்பட்டு நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாண சிறைச்சாலையின் முன்பக்க வளாகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் சிறைச்சாலை மூத்த அதிகாரிகள் சிறைச்சாலை அலுவலர்கள் சிறைச்சாலை காவலர்கள் பங்குபற்றினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews