கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிப்பு –

தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறும் வகையில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று (19) கைதுசெய்யப்பட்ட இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் அவர்களை பிணையில் செல்வதற்கு அனுமதியளித்தார்.

மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டு நிலையில் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு தமக்கும் அனுமதியளிக்குமாறு கோரி, ஐக்கிய சுயதொழிலாளர் சங்கத்தினர், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: Editor Elukainews