யாழ். பாசையூரில் வாள்வெட்டுகுழு வீடு புகுந்து அட்டகாசம்! 30 நிமிடங்களில் 7 ரவுடிகளை மடக்கியது பொலிஸ்.. |

யாழ்.பாசையூர் கிராமத்தில் வீடு புகுந்து வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 7 பேரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குறித்த வன்முறைச் சம்பவம் இடம்பெற்று 30 நிமிடங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்று மாலை 2.30 மணியளவில் பாசையூர் அந்தோனியார் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டுக்குள் புகுந்த வன்முறைக்கும்பல் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து நொருக்கி அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன்

வீட்டாரையும் அச்சுறுத்திவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவல் அடிப்படையில் சம்பவ இடத்தை முற்றுகையிட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் நடத்திய தேடுதலில்

வன்முறைக் கும்பலை சேர்ந்த 7 பேரை கைது செய்துள்ளதுடன் 3 மோட்டார் சைக்கிள்கள், வாள், கம்பி, கட்டை ஆகியவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மணியந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews