யாழ்.திருநெல்வேலி, ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம்..! பொலிஸ் சுற்றிவளைப்பில் 35 பேர் கைது.. |

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி யாழ்.திருநெல்வேலியில் மற்றும் ஆனைக்கோட்டை பகுதிகளில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

திருநெல்வேலிப் பகுதியில் உள்ள பிரபல விடுதியில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 20 பேரும், ஓட்டுமடம் பகுதியில் உள்ள வீடொன்றில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 15 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் இரு பிறந்தநாள் கொண்டாட்டத்திலும் கைது செய்யப்பட்டவர்கள் யாழ்.பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

இவர்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்

Recommended For You

About the Author: Editor Elukainews