யாழ்.வட்டுக்கோட்டையில் குழு மோதலில் ஒருவர் படுகாயம்! இருவர் கைது, பொலிஸார் நடவடிக்கை.. |

யாழ்.வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான மோதலில் தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் படுகாயமடைந்த குடும்பஸ்த்தர் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு காயமடைந்துள்ள குடும்பஸ்த்தரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதுடன் குறித்த நபர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு

தப்பி சென்றுள்ளது. இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews