முழுமையாக தடுப்பூசி பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு சுகாதார அமைச்சர் விடுத்த மகிழ்ச்சித் தகவல்

முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்ட இலங்கையர்கள் நாட்டிற்கு வருகைத்தரும் போது பிசிஆர் சோதனைக்காக ஒரு ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறித்த நபர்களின் வருகையின் பின்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்கள் சுகாதார அமைச்சினால் பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான புதிய திட்டமானது அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படும் என்றும், பிசிஆர் சோதனை முடிவுகள் எதிர்மறையாக இருப்பின் அவர்கள் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews