கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்!:இராணுவத் தளபதி.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவுள்ள நிலையில் குறித்த கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.
செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் இராணுவத் தளபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews