யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து 7 நாட்களின் பின் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்த சோகம்..! |

யாழ்.போதனா வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்து ஒரு வாரத்தில் தாய் கொரோனா தொற்றினால் உயிரிழந்தள்ளார். 

அளவெட்டி பகுதியை சேர்ந்த அஞ்சல் சேவை கல்லுாரியின் போதனாசிரியரான 42 வயதான சதீஸ்குமார் அபிமினி என்பரே உயிரிழந்துள்ளார்.

கடந்த 8ம் திகதி திடீர் சுகயீனம் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனையடுத்து கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் அன்றைய தினமே பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்.

எனினும் தாயாருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிழமை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை பெண் குழந்தை நலமுடன் உள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews