யாழ்.பருத்தித்துறை திக்கத்தில் சடலமாக மீட்கப்பட்ட பெண் உட்பட 4 கொரோனா மரணங்கள் பதிவு!

யாழ்.பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி உடுப்பிட்டியை சேர்ந்த ஒரு வயதும் 3 மாதங்களும் நிரம்பிய குழந்தை புரையேறிய நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளது.

குறித்த குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதேபோல் மந்திகை வைத்தியசாலையின் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த

வல்வெட்டித்துறையை சேர்ந்த 78 வயதான ஆண் ஒருவரும், மந்திகை வைத்தியசாலை கொரோனா சிகிச்சை ிபரிவில் சிகிச்சை பெற்றுவந்த

வல்வெட்டித்துறையை 72 வயதான பெண் ஒருவரும், பருத்தித்துறை திக்கம் பகுதியில் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்ட 56 வயதான பெண் ஒருவருக்குமாக

பருத்தித்துறையில் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews