விவசாய சம்மேளனங்களுக்கு கை உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்வு

கிழக்கு மாகாண கால் நடை விவசாயஅபிவிருத்தி அமைச்சினால் தெரிவு செய்யப்பட்ட விவசாய சம்மேளனங்கள் மற்றும் சுய உற்பத்தியாளர்களுக்கு கை உழவு இயந்திரம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண சபை மண்டபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அவர்களுடன் வர்த்தக வாணிப பிரதி இராஜஅமைச்சர் வியாழேந்திரன் அவர்கள் மற்றும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கொரல்ல போன்றோருடன் துறைசார் அமைச்சுக்களின் செயலாளர்களும் கலந்து கொண்டனர்.


நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்ட மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 22விவசாய சம்மளனப்பிரதிநிதிகளும் அழைக்கப்பட்டிருந்தனர்.கடந்த வருடம் கிழக்கு மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட திறனாய்வு நடவடிக்கையின் போது இவ்விவசாய சம்மேளனங்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews