சந்நிதியான் ஆச்சிரமத்தால் 90,000 ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் வாராந்த நிகழ்வில் வழங்கப்பட்டன

வாராந்த நிகழ்வின் சிறப்பு நிகழ்வாக “ஆடிப்பாடி மகிழ்வோம்” வாணிக்கலைஞன் திரு.செ.செந்தில்வேல் ஆசிரியர் அவர்களின் நிகழ்வும் இடம்பெற்றது.

வாராந்த நிகழ்வில் 02 மாணவர்களிற்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

கலைமதி வீதி, புத்தூர் மேற்கு கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள – யா/ஶ்ரீ சோமஸ்கந்த கல்லூரியில் கல்வி கற்கும் மாணவிக்கும் ,

ஏழாலை – ஏழாலை மேற்கு கிராமத்தை வசிப்பிடமாகவுள்ள யா/ இராமநாதன் கல்லூரியில் தரம் 09 இல் கல்வி கற்கும் மாணவிக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டது.

இவ் செயற்றிட்ட உதவிகளை கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்கள் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வில் வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews