தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்…!

தையிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிராக மூன்றாம் கட்டமாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பம் ஏற்று ஆரம்புக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் பல்வேறு தடைகளையும்  தாண்டி விகாரைக்கு முன்பாக போராட்டக்காரர்கள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தையிட்டயில் விகாரை தனியார் காணிகளில் சட்டவிரோதமாக  கட்டப்பட்டுக் கொண்டிருந்த போதே அதனை நிறுத்துமாறு பிரதேச சபை, மற்றும் அரசின் ஒருங்கிணைப்பு குழு என்பன தீர்மானம் நிறைவேற்றியிருந்தன. அதனையும் மீறி குறித்த விகாரை அமைக்கப்பட்டு அண்மையில் பிரதிஸ்டை செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த விகாரையை அகற்ற கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னமியால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் மூன்றாம் கட்டமாகா பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராச கஜேந்திரன் தலமையில் மீண்டும் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews