யாழ்ப்பாணத்தின் கொரோனா நிலவரம்! அரச அதிபர் வெளியிட்டுள்ள அறிவிப்பு –

யாழ்ப்பாணத்தில் தற்போது 5414 குடும்பங்களைச் சேர்ந்த 15 ஆயிரத்து 888 பேர் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொரோனா நிலைமையை அவதானிக்கும்போது நேற்றைய தினம் மாத்திரம் 76 கொரோனா தொற்றாளர்கள் யாழ்ப்பாணத்தில் கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து, மாவட்டத்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,255ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 320 ஆக கொரோனா இறப்புக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இதன்படி முதலாவது அளவை 2 லட்சத்து 98 ஆயிரத்து 509 பேரும் இரண்டாவது அளவை 2 லட்சத்து 39 ஆயிரத்து 976 பேரும் பெற்றுள்ளனர் என்று யாழ்ப்பாண அரச அதிபர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews