கிணற்றில் விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி: யாழில் சோகம்

யாழில் இரண்டரை வயதுக் குழந்தை ஒன்று கிணற்றினுள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, இளவாலை- வசந்துபுரம் பகுதியில் இன்றைய தினம் (09.05.2023) இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி ரக்ஸிகா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

குழந்தையின் தந்தை வேலைக்குச் சென்ற நிலையில், தாயார் சமையல் வேலைகளை செய்துகொண்டிருந்துள்ளார். இதன்போது அருகில் உள்ள வீட்டுக் கிணற்றினுள் குழந்தை விழுந்துள்ளது.

இதனையடுத்து, குழந்தையை மீட்டுள்ள உறவினர்கள், தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோனை செய்துள்ள வைத்தியர்கள், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்துள்ள குழந்தையின் சடலம், பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews