ரூ. 25,000 இற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் மூலம் மின்சார வசதி

ரூ. 25,000 இற்கும் குறைந்த வருமானம் பெறும் குடியிருப்பாளர்களுக்கு இலவச சோலார் பேனல்கள் வழங்கும் பணி அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்ற பிறகு தொடங்கப்படும் என்று நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டுவசதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

500 மெகாவோட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தேசிய திட்டத்திற்கு சேர்க்கப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந்த திட்டம் முதலில் இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்படும்.

முதற்கட்டமாக 10,000 வீடுகளுக்கும் இரண்டாம் கட்டத்தின் கீழ் 15,000 வீடுகளுக்கும் சோலார் பேனல்கள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஒரு வீட்டிற்காக 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.தேசிய வீடமைப்பு மேம்பாட்டு ஆணையத்தின் அறிக்கைகளின்படி, 2015 2019 ஆம் ஆண்டில், பல்வேறு காரணங்களால் கட்டுமானத்தைத் தொடங்கி நிறுத்தப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 69000 ஆகும்.

அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 25000 வீடுகளுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும். அந்த வீடுகளின் மேற்கூரையில் அமைக்கப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மூலம் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதைத் தவிர தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்கப்படும் என்று அமைச்சர் கூறுகிறார். தேசிய வீட்டு வசதி மேம்பாட்டு ஆணையம் 2015 2019 இல் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உதவி என்ற அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் தற்போது பல்வேறு காரணங்களால் வழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

இதன்படி மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை, அநுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் என ஆரம்பிக்கப்பட்டு பாதியில் நிறுத்தப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்காகவே இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Recommended For You

About the Author: Editor Elukainews