அழிந்துபோகும் நாட்டுக் கூத்தை காப்பாற்றுவோம்- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’

வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது.

திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம அதிதிகளாக மட்டக்களப்பு உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன்,கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் வ.தேவநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெற்றதுடன் மாணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மட்டக்களப்பில் ஒல்லாந்தர் படையெடுத்துவந்தது கொக்கட்டிச்சோலை ஆலயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டு ஒல்லாந்தன் நந்திப்புல்’வடமோடி கூத்து நடாத்தப்பட்டது.
நிகழ்வினை கண்டுகளிப்பதற்காக பெருமளவானோர் ஒன்றுகூடியிருந்ததை காணமுடிந்தது.

Recommended For You

About the Author: Editor Elukainews