நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிப்பு…!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 184 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கொரோனா மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 504 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த 184 பேரில் 87 பெண்களும், 97 ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று அரச தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook

Recommended For You

About the Author: Editor Elukainews